பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணனுக்கு அமைந்துள்ள நாமங்கள்!
ஹ்ருஷீகேசன்: இந்திரியங்களுக்கு ஈசன்
அச்யுதன்: தன் நிலையினின்று வழுவாதவன்
கிருஷ்ணன்: கருப்பு நிறமானவன், அழுக்கைப் போக்குபவன், மும்மூர்த்தி சொரூபம், பிரம்ம சொரூபம், அடியார் படும் துயரம் துடைப்பவன்
கேசவன்: அழகிய முடியுடையவன், மும்மூர்த்திகளை வசமாய் வைத்திருப்பவன், கேசின் என்ற அசுரனைக் கொன்றவன்.
கோவிந்தன்: ஜீவர்களை அறியபவன்
மதுசூதனன்: மது என்ற அசுரனை அழித்தவன்
ஜநார்தனன்: மக்களால் துதிக்கப்படுபவன்
மாதவன்: திருமகளுக்குத் தலைவன்
வார்ஷ்ணேயன்: வ்ருஷ்ணி குலத்தில் உதித்தவன்
அரிசூதனன்: எதிரிகளை அழிப்பவன்
கேசிநிஷுதனன்: கேசின் என்ற அசுரனை அழித்தவன்
வாசுதேவன்: வாசுதேவன் மைந்தன், எல்லா உயிர்களிடத்திலும் இருப்பவன்
புருஷோத்தமன்: பரம புருஷன்
பகவான்: ஷட்குண சம்பன்னன்
யோகேச்வர: யோகத்துக்குத் தலைவன்
விஷ்ணு: எங்கும் வியாபகமாயிருப்பவன்
ஜகந்நிவாசன்: உலகுக்கு இருப்பிடம்
யாதவன்: யதுகுலத்தில் தோன்றியவன்.