பழநியில் ஜூன் 26 முதல் 29 வரை அன்னாபிஷேகம்
ADDED :2984 days ago
பழநி : பழநி முருகன் கோயில், அதன் உபகோயில்களில் ஜூன் 26 முதல் 29 வரை உலக நலன்வேண்டி யாக பூஜை, அன்னாபிஷேகவிழா நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆனிமாதம் பவுர்ணமிக்கு முதல்நாள் துவங்கி 4 நாட்கள் அன்னாபிஷேகம் நடக்கிறது. ஜூன் 26ல் பழநி மலைக் கோயில் பாரவேல் மண்டபத்தில் 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு, யாக பூஜையுடன் உச்சிக் காலத்தில் மூலவருக்கு சங்காபிஷேகம் செய்து அன்னாபிஷேகம் நடக்கிறது. ஜூன் 27ல் பவுர்ணமி அன்று திருஆவினன்குடி கோயிலில் சாயரட்சை பூஜையில் அன்னாபிஷேகம் நடக்கிறது. ஜூன் 28ல் பெரிய நா-யகியம்மன் கோயில், ஜூன் 29ல் கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேகம் நடக்கிறது.