மாணிக்கவாசகர் குருபூஜை: திரளான பக்தர்கள் தரிசனம்
ஆத்தூர்: மாணிக்கவாசகர் குருபூஜை விழாவில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், நான்காமாண்டு, மாணிக்கவாசகர் குருபூஜை விழா, நேற்று நடந்தது. அதை முன்னிட்டு, காலை முதல், மாலை வரை, சிவனடியார்களின் சிவபூஜை வழிபாடு நடந்தது. தொடர்ந்து, சுவாமி சன்னதியில், குரு பூஜை, சிறப்பு ஹோமம் நடந்தது. சிவ பக்தர்கள், தேவாரம், திருவாசகம் பாடி வழிபட்டனர். பின், மாணிக்கவாசகர் மற்றும் யோகாம்பாள் சமேத ஆத்மநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின், சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை, ஆறடி உயரத்தில் பஞ்சலோக மாணிக்கவாசகர், சிவ பெருமான், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர், விநாயகர் சுவாமி சிலைகள், ஏழு வாகனங்களில், ஆத்தூர் நகர் முழுவதும் ஊர்வலமாக கொண்டு சென்றனர். ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர்.