உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் பூக்குழி: பக்தர்கள் நேர்த்திக்கடன்

பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் பூக்குழி: பக்தர்கள் நேர்த்திக்கடன்

சிவகங்கை:சிவகங்கை பையூர் பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நேற்று காலை 9:30 மணிக்கு காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு தீப அலங்கார நெய்வேத்தியங்களும் நடந்தன. மாலை 4:45 மணிக்கு பூஜாரி பூமிநாதன் தலைமையில் பக்தர்கள் அம்மன் சன்னதியில் இருந்து தெப்பக்குளம் சென்றனர். அங்கிருந்து பூக்கரகம், தீச்சட்டி எடுத்து கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். மாலை 6:00 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜூலை 13 காலை 10:30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிேஷகம் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன் குழந்தையுடன் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து பூச்சொரிதல் விழா நடக்கிறது. பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஏற்றுதல், பிள்ளைத் தொட்டி கட்டுதல், முடி இறக்குதல் போன்ற நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !