உலக நன்மை வேண்டி கூட்டு பிரார்த்தனை
ADDED :2761 days ago
பெரியகுளம், பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் உலக நன்மை வேண்டி தொடர்ந்து 14 மணி நேரம் ஹரே ராம ஹரே ராம நாமசங்கீர்த்தனம் கூட்டு பிரார்த்தனை நடந்தது. ராதை, கிருஷ்ணருக்கு தாமரைப்பூக்களால் அலங்காரம் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாமத்வார் பொறுப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.