வடமதுரை பெருமாள் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றம்
ADDED :2648 days ago
வடமதுரை:வடமதுரையில் சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மண்டபடிதாரர் சரவணமூர்த்தி மற்றும் உடையாம்பட்டி கிராம மக்கள் வடமதுரையின் நான்கு ரத வீதிகள் வழியே ஊர்வலம் வந்து கொடியை கோயிலுக்குள் கொண்டு வந்தனர்.
கொடிமரம் முன்பாக ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள சிறப்பு பூஜைகள் முடிந்து காலை 11:55 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. 13 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் நாள்தோறும் இரவு அனுமார், அன்னம், சிம்மம் உட்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும், மண்டகபடிதாரர் சார்பில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். ஜூலை 25ல் திருக்கல்யாணம், ஜூலை 27ல் தேரோட்டம், ஜூலை 29ல் வசந்தம் முத்துபல்லக்கு வைபவம் நடக்கிறது.