உலக நலன் வேண்டி சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :2833 days ago
திருப்பூர்:ஆடி வெள்ளியை முன்னிட்டு, சுக்ரீஸ்வரர் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது. திருப்பூர், பெரியபாளையம் ஆவுடையநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவிலில், நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. மொத்தம், 751 பெண்கள் மஞ்சள், குங்குமம், வளையல், பூ மாலைகளுடன் திருவிளக்கு ஏற்றி, வழிபாடு நடத்தினர்.