உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாலை சூட்ட மஞ்சக்கயிறு கட்டுங்க!

மாலை சூட்ட மஞ்சக்கயிறு கட்டுங்க!

தமிழகத்தின் திரிவேணி என போற்றப்படும் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் ஆடிப்பெருக்கு சிறப்பாக கொண்டாடப் படும். அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கும். மக்கள் கூடுதுறை ஆற்றில் நீராடி விட்டு சங்கமேஸ் வரரை வழிபடுவர். தேங்காய், பழம், பூ, காதோலை, கருகமணி படைத்து நதிக்கு பூஜை செய்வர். பூஜையில் வைத்த மஞ்சள் கயிற்றினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் காப்பாக கட்டிக் கொள்வர். இதனால் குடும்பத்தில் மாலை சூடும் மங்கல நிகழ்வுகள் தொடர்ந்து நிகழும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !