உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ­விருத்­தா­ச­லம் கோவி­லில் ஆடி கிருத்திகை கோலாகலம்: பக்தர்கள் நேர்த்திக்கடன்

­விருத்­தா­ச­லம் கோவி­லில் ஆடி கிருத்திகை கோலாகலம்: பக்தர்கள் நேர்த்திக்கடன்

விருத்தாசலம்: ஆடி கிருத்­தி­கை­யொட்டி, விருத்­தா­ச­லம் கோவில்­க­ளுக்கு பால்­கு­டம், காவடி சுமந்து பக்­தர்­கள் நேர்த்­திக்­க­டன் செலுத்­தி­னர். விருத்­தா­ச­லம் விருத்­த­கி­ரீஸ்­வ­ரர் கோவி­லில் உள்ள வள்ளி தெய்­வானை சமேத சண்­முக சுப்­ர­ம­ணி­யர் சுவாமி, 28 ஆகம சன்­ன­தி­யில் உள்ள கும­ரேச சுவா­மி­க­ளுக்கு சிறப்பு அபிஷே­கம், சிறப்பு அலங்­கா­ரத்­தில் தீபா­ரா­தனை நடந்­தது. மாலை சந்­த­னக்­காப்பு அலங்­கா­ரத்­தில் சுவா­மி­கள் அருள்­பா­லித்­த­னர்.

மண­வா­ள­நல்­லுார்: கொளஞ்­சி­யப்­பர் கோவி­லில் சித்தி விநா­ய­கர், சுவா­மிக்கு பால், தயிர், சந்­த­னம், இள­நீர், தேன், பஞ்­சா­மிர்­தம், திர­விய பொருட்­க­ளால் சிறப்பு அபிஷே­கம் நடந்­தது. விநா­ய­கர் வெள்­ளிக் கவ­சத்­தி­லும், கொளஞ்­சி­யப்­பர் தங்­க­மு­லாம் பூசிய கிரீ­டத்­தி­லும் அருள்­பா­லித்­த­னர். இரவு சுவாமி வீதி­யுலா நடந்­தது. கரு­வேப்­பி­லங்­கு­றிச்சி சாலை, வேடப்­பர் கோவி­லில் சுவா­மிக்கு சிறப்பு அபிஷேக ஆரா­தனை நடந்­தது. மேலும், மணி­முக்­தாற்­றி­லி­ருந்து பக்­தர்­கள் பால்­கு­டம், இள­நீர் காவடி, தாள் காவடி சுமந்து ஊர்­வ­ல­மாக சென்று, நேர்த்­திக்­க­டன் செலுத்­தி­னர். கொளஞ்­சி­யப்­பர் கோவி­லுக்கு நெய்­வே­லியை சேர்ந்த பக்­தர் ஒரு­வர், மரத்­தி­னால் செய்த ஊஞ்­சல் தொட்டி கொடுத்து, நேர்த்­திக்­க­டன் செலுத்­தி­னார்.

நடு­வீ­ரப்­பட்டு: பண்­ருட்டி அடுத்த புல­வ­னுார் பால­மு­ரு­கன் கோவி­லில் ஆடி கிருத்­திகை விழா கடந்த 27 ம் தேதி கொடி­யேற்­றத்­து­டன் துவங்­கி­யது. கிருத்­திகை தின­மான நேற்று காலை பெண்ணை ஆற்­றி­லி­ருந்து காவ­டி­களை அபிஷே­கம் செய்து பக்­தர்­கள் வீதி உலா­வாக எடுத்து வந்­த­னர். பகல் 1:00 மணிக்கு செடல் போட்டு மரத்­தில் தொங்­கும் காவடி பூஜை நடந்­தது. தொடர்ந்து பக்­தர்­க­ளுக்கு மிள­காய்­பொடி, பால், பன்­னீர் உள்­ளிட்ட பொருட்­க­ளால் அபிஷே­கம் நடந்­தது. பக்­தர்­கள் முது­கில் அலகு குத்தி தேர் இழுத்து நேர்த்தி கடன் செலுத்­தி­னர். இரவு சுவாமி வீதி உலா நடந்­தது. இன்று  இடும்­பன் பூஜை நடக்­கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !