சாயல்குடி சிவன் கோயில்களில் பிரதோஷ விழா
சாயல்குடி, சாயல்குடியில் உள்ள ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட கைலாசநாதர் சமேத மீனாட்சியம்மன் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜைகளை ரவிச்சந்திர குருக்கள் நடத்தினார். மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிற வள்ளியம்மன் கோயிலில் நடந்த பிரதோஷ விழாவில் மூலவருக்கும், நந்திக்கும் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.
* சிக்கல் அருகே மேலக்கிடாரம் திருவனந்தீஸ்வரமுடையார் சமேத சிவகாமியம்மன் கோயிலில் நந்திக்கும், மூலவருக்கும் 18 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பூஜைகளை செந்தில்குமார் செய்திருந்தார். உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் மூலவர் மற்றும் பிரதோஷ நந்திக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
* கீழக்கரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. மாலையில் உற்சவர் வீதியுலா புறப்பாடு நடந்தது.ஏற்பாடுகளை மாதாதந்திர பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்.
* ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு பிரதோஷ விழா நடந்தது. ஏற்பாடுகளை ஐயப்பா சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.