’சர்வசாதகம்’ என சிலரை குறிப்பிடுவதன் பொருள் என்ன?
ADDED :2645 days ago
கும்பாபிஷேகத்தின் போது யாகசாலை அமைத்தல், யாகம் நடத்துதல், சுவாமி சிலைகளுக்கு மருந்து சாத்துதல், கோபுர, விமான கலசங்களை சரிபார்த்து வைத்தல், அபிஷேகம், ஆராதனை என எல்லா நிகழ்ச்சிகளும் முறையாக நடத்தப்பட வேண்டும். கோயிலில் உள்ள அர்ச்சகர்கள் யாகத்தில் அமர்ந்திருக்க வேண்டியது அவசியம் என்பதால், மேற்படி விஷயங்களை அவர்களின் பிரதிநிதியாக அனுபவமிக்க சிவாச்சாரியார் அல்லது பட்டாசாரியார் ஏற்று நடத்துவர். இவர்களை ’சர்வசாதகம்’ என்பர். ’எல்லாவிதத்திலும் உதவுதல்’ என்பது இதன் பொருள்.