உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மறவாத வரம் வேண்டுவோம்

மறவாத வரம் வேண்டுவோம்

காயத்ரி என்பதற்கு ’யார் எல்லாம் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை காப்பது என்று அர்த்தம்’ என காஞ்சி மகாபெரியவர் விளக்கம் அளிக்கிறார். ’கானம் பண்ணுவது’ என்றால் அன்பு, பக்தியுடன் உச்சரிப்பது என்பது பொருள்.  இந்த மந்திரம் ஆண்களுக்குரியது. ஆண்கள்  ஜபித்தாலே பெண்களுக்கும் நன்மை உண்டாகும். மற்ற மந்திரங்களை நீண்ட காலமாக ஜபித்த பிறகு தான் ’சித்த சுத்தி’ என்னும் மனத்துதூய்மை உண்டாகும். ஆனால் காயத்ரியை ஜபித்தது முதல் சித்தசுத்தி உண்டாக தொடங்கி விடும். அனைத்து நலன்களையும் தரும் காயத்ரி என்னும் மந்திரசக்தி நம்முள் அணையாமல் விருத்தியாக அருள்புரிய வேண்டும் என கடவுளை பிரார்த்திப்போம். ஒருநாளும் காயத்ரி மந்திரத்தை மறக்காத வரத்தை வேண்டுவோம். இந்த மந்திரத்திலுள்ள எழுத்துக்களும், அதற்குரிய தெய்வம், ஜபித்தால் உண்டாகும் பலனும் இங்கு இடம் பெற்றுள்ளது.   

எழுத்து       தெய்வம்          பலன்
தத்    தபினி    வெற்றி
ச    சாமுண்டி    வலிமை
வி    விஷ்வா    நல்ல அறிகுறி
துர்    துஷ்டி    நல்வாழ்வு
வ    வரதாம்பிகை     யோகம்
ரே     ரேவதி    பிரிந்தவர் சேர்தல்
ண்    ருக்ஷ்மா    செல்வ வளம்
யம்    ஞானாம்பிகை    கல்வி வளம்
பர்    பார்கவி    ஆபரண யோகம்
கோ     கோமதி    அறிவு, ஞானம்
தே    தேவிகா    மங்கள நிகழ்வு
வ    வராகி    தீயசக்தி அழிதல்
ஸ்ய    சின்ஹனி    பாதுகாப்பு
தீ    தியானாம்பிகை    தீர்க்காயுள்
ம     மர்யாதா    கண்டம் நீங்கும்
ஹி    ஸ்புடநாயகி    ஆன்மிக சாதனை
தி    மேதா    முக்காலம் அறிதல்
யோ    யோகமாயா    விழிப்புணர்ச்சி
நஹ்    தாரணி    இல்லற இன்பம்
ப்ர    ப்ரபவா    உயர்ந்த லட்சியம்
சோ    ஊஸ்மா    தைரியம்
த    த்ரஷ்யா    நல்லறிவு
யாத்    நிரஞ்சனாதேவி    தொண்டுள்ளம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !