உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் தொட்டிப்பட்டி, சாய் தபோவனத்தில் சிறப்பு ஆரத்தி நிகழ்வு

நாமக்கல் தொட்டிப்பட்டி, சாய் தபோவனத்தில் சிறப்பு ஆரத்தி நிகழ்வு

நாமக்கல்: தொட்டிப்பட்டி, சாய் தபோவனத்தில், ஆவணி மூன்றாவது வியாழனை முன்னிட்டு, சுவாமி ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது. நாமக்கல் அடுத்த தொட்டிப்பட்டி, ஷீரடி சாய்பாபா சாய் தபோவனத்தில், ஆவணி மூன்றாவது வியாழனை முன்னிட்டு, சிறப்பு ஆரத்தி, அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று (செப்., 6ல்) அதிகாலை, சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம், உற்சவருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆரத்தி நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் கொண்டு வந்த மலர்களால் சிறப்பு அலங்காரம், பாபாவின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. பின்னர், மதியான் ஆரத்தி எனும் ஆரத்தி பாடப்பட்டு பாபாவிற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது.

சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வள்ளிபுரத்தில் இருந்து, இலவச வாகன வசதி செய்யப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !