உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று (செப்.,17ல்)புரட்டாசி உற்சவ திருவிழா துவக்கம்

நாமக்கல் நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று (செப்.,17ல்)புரட்டாசி உற்சவ திருவிழா துவக்கம்

நாமக்கல்: நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலில், புராட்சி உற்சவ திருவிழா, இன்று (செப்., 17ல்) துவங்குகிறது. நாமக்கல் மாவட்டம், புதன் சந்தை அருகே நைனாமலை உள்ளது. இங்கு, 2,600 அடி உயரம் கொண்ட மலை உச்சியில், வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவில், பல்லவர் மன்னனால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. மேலும், கோவிலின் சில பகுதிகள், திருமலை நாயக்கரின் தம்பி ராமச் சந்திர நாயக்கர் கட்டியதற்கான சான்றுகள் உள்ளன. அடிவாரத்தில் இருந்து மலைப்பாதை வழியாக, 3,360 படிகளை கடந்து சென்றால் மட்டுமே, நின்ற நிலையில் வீற்றிருக்கும் குவலய வல்லி தாயார் சமேத வரதராஜ பெருமாளை தரிசிக்க முடியும். மலைப்பாதையில் வற்றாத ஊற்றுகளான அரிவாள் பாழியும் மற்றும் அமையா தீர்த்தம் எனும் பெரிய பாழியும் அமைந்துள்ளது இக்கோவிலின் சிறப்பு. மலை உச்சியில் உள்ள, 120 அடி உயரம் கொண்ட, ஒரே பாறை மீது இக்கோவில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோவிலில், ஆண்டு தோறும் புரட்டாசி உற்சவ திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இன்று செப்.,17ல் புரட்டாசி உற்சவ விழா துவங்குகிறது. ஒவ்வொரு சனிக்கிழமை யும், லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர். அதில், மூன்றாவது வாரம், வரும் பக்தர்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும். வரும், 22ல், முதல் சனிக்கிழமை, 29ல், இரண்டாவது, அக்., 6ல், மூன்றாவது, 13ல், நான்காவது சனிக்கிழமை. இந்த நாட்களில், சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !