கிருஷ்ணகிரி அடுத்த, அம்மன் நகரில் உள்ள பஞ்சமுக விநாயகர் வீதி உலா
ADDED :2714 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த, அம்மன் நகரில் உள்ள பஞ்சமுக விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கடந்த, 13 முதல் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவ மூர்த்தி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேர் அம்மன் நகர், ஆவின் நகர் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. ஏற்பாடுகளை, நாராயணமூர்த்தி மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.