உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் கோவில் ஊழியர்களுக்கு பயிற்சி

சென்னையில் கோவில் ஊழியர்களுக்கு பயிற்சி

சென்னை:கோவில் பராமரிப்பு குறித்த, இரண்டு நாள் பயிற்சி, அண்ணா மேலாண்மை கூட்ட அரங்கில், நேற்று (அக்.,3ல்) துவங்கியது.

அறநிலையத்துறை கமிஷனர் ராமச்சந்திரன் கூறியதாவது: அறநிலையத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும், கோவில்களை, தொன்மை மாறாமல் பராமரிப்பதற்கான நடைமுறை, நிர்வாகம், திருப்பணி, ஆகமவிதி, தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதன் முதல் கட்டமாக, தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையுடன் இணைந்து, இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !