தசரா – பெயர் விளக்கம்
ADDED :2652 days ago
கர்நாடகாவை ஆட்சி செய்த மன்னர்கள் நவராத்திரி காலத்தில் (9 நாள்) தினமும் மைசூரு சாமுண்டீஸ்வரியை வணங்குவர். பத்தாவது நாளான விஜயதசமியன்று போருக்குச் சென்று அம்மன் அருளால் வெற்றி வாகை சூடுவர். இதனடிப்படையில் தற்போது மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் அரசு சார்பாக தசரா விழா கொண்டாடப்படுகிறது. ’தஸ் ராத்’ என பெயர் பெற்ற இந்த விழா தற்போது ’தசரா’ என வழங்கப்படுகிறது. ’பத்து இரவுகள்’ என்பது இதன் பொருள்.