திருவிழா முடிவில் தீர்த்தவாரி நடத்துவது ஏன்?
ADDED :2764 days ago
தானே வலிந்து அடியவர்களை நாடி கடவுள் செல்லும் அற்புத நிகழ்ச்சியே திருவிழா. இதன் முடிவில் தீர்த்தவாரி நடத்துவர். மனம், மொழி, மெய்களால் ஏற்படும் தீமைகளை போக்கி நல்லறிவு புகட்டுவதே தீர்த்தவாரி. இதனால் எண்ணம், சொல், செயல் புனிதம் பெறும்.