ஜீவசமாதி என்கிறார்களே....உயிருடன் இருக்க முடியுமா?
ADDED :2580 days ago
பசி, தாகம், தூக்கம், நோய் என உணர்வுகளில் இருந்து உயிர் விடுபடும் நிலை இறப்பு. தவவலிமையால் சில மகான்கள் உடல், மனதைக் கட்டுப்படுத்தி உயிருடன்இருக்கும் போதே உணர்வு நிலையில் இருந்து விடுபடுவர். இவர்களின் உயிர் எப்போது உடலை விட்டு நீங்கும் என்பது யாருக்கும் தெரியாது. இந்த அருளாளர்கள் இருக்குமிடத்தை ’ஜீவசமாதி’ என்பர். இவர்களைக் கடவுளாகக் கருதி வழிபடுவர்.