உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை காசிவிஸ்வநாதருக்கு பிரதோஷ வழிபாடு

வால்பாறை காசிவிஸ்வநாதருக்கு பிரதோஷ வழிபாடு

வால்பாறை:வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, நேற்று முன் தினம் மாலை பிரதோஷ பூஜை நடந்தது.மாலை, 6:00 மணிக்கு சிவபெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், திருநீறு, குங்குமம், பஞ்சாமிர்தம், அரிசிமாவு உள்ளிட்ட, 16 வகையான பொருட்கள் கொண்டு அபிேஷக வழிபாடு செய்யப்பட்டது.அதன் பின், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து, ரிஷப வாகனத்தில் காசிவிஸ்வநாதர் தேவியருடன் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !