பண்ணாரி கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :2532 days ago
சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவிலில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். சத்தியமங்கலம் அருகே, பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும், கர்நாடக மாநிலம் மைசூர், சாம்ராஜ்நகர், மாண்டியா பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று காலை முதல், பக்தர்கள் வரதொடங்கினர். நேரம் செல்ல, செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. பண்டிகையை முன்னிட்டு பண்ணாரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.