உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ரூ.30.15 லட்சம் உண்டியல் வசூல்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ரூ.30.15 லட்சம் உண்டியல் வசூல்

அவலூர்பேட்டை:மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் 30 லட்சத்து 15 ஆயிரத்தி 688 ரூபாய் உண்டியல் பணம் வசூல் ஆனது.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசை முடிந்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டன.இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர்கள் பிரகாஷ், ஜோதி ஆகியோர் முன்னிலையில் கோவில் வளாகத் தில் பணம் எண்ணும் பணி நடந்தது.30 லட்சத்து 15 ஆயிரத்தி 688 ரூபாய் பணமும், 251 கிராம் தங்க நகைகள், 225 கிராம் வெள்ளி நகைகளை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

இதில் அறங்காவலர் குழு தலைவர் கணேசன், அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ்,செல்வம், மணி, சரவணன், சேகர் ஆய்வாளர் அன்பழகன்,சுரேஷ், கண்காணிப்பாளர் வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !