சென்னை பெருக்க ஈஸ்வரர் கோவிலில், லட்ச தீப நிகழ்ச்சி
ADDED :2664 days ago
சென்னை: பெரும்பாக்கத்தில் உள்ள, பெருக்க ஈஸ்வரர் கோவிலில், நாளை (நவம., 17ல்), லட்சதீப நிகழ்ச்சிநடைபெறுகிறது.
பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள, பழண்டியம்மன் சமேத பெருக்க ஈஸ்வரர் கோவிலில், லட்சதீப நிகழ்ச்சி, நாளை (நவம., 17ல்) காலை, வெகு விமரிசையாக நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, ஆலய அறங்காவலர், ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.மேலும் தகவலுக்கு, ஆலய அர்ச்சகர் பாலாஜியை, 98403 41815 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.