சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
செஞ்சி: செஞ்சி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.செஞ்சி காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் அகல் விளக்கேற்றி நந்தீஸ்வரை வழிபட்டனர். பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அருணாச்சலேஸ்வரர், அபிதகுஜாம்பாள் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அர்ச்சனை, மகா தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு சுவாமி கோவில் உலா நடந்தது.முக்குணம் முக்குன்றநாத உடையார் கோவிலில் முக்குன்றநாதர், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சுவாமி கோவில் உலா நடந்தது. பெருவளூர் கோகிலாம்பாள் உடனுறை கோட்டீஸ்வரர் கோவிலில் கோட்டீஸ்வரர், கோகிலாம்பாள் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.