வடமதுரையில் திருவாசகம் முற்றோதல்
ADDED :2696 days ago
வடமதுரை:வடமதுரையில் 300 ஆண்டுகள் பழமையான மீனாட்சியம்மன் உடன்அமர் சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது.பல ஆண்டுகளாக திருப்பணி நடைபெறாமல் பொலிவிழந்த நிலையில் உள்ளது. இதனால் கோயிலில் திருப்பணி நடைபெற வேண்டி திருவாசக முற்றோதல் திருவிழா நடந்தது. பின்னர் மகேஸ்வர பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடந்தது. விழா ஏற்பாட்டினை வடமதுரை ஒன்றிய சிவனடியார்கள் சங்க உறுப்பினர்களும், பொதுமக்களும் செய்திருந்தனர்.