அன்புக்கு நான் அடிமை
ADDED :5024 days ago
பாண்டிய மன்னன் மலையத்துவஜன், குழந்தை வரம்வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தான். அப்போது யாகத்தீயில் இருந்து மூன்று வயது பெண்குழந்தையாக பார்வதிதேவி அவதரித்தாள். பாண்டியனின் மனைவி காஞ்சனமாலை முற்பிறவியில் வித்யாவதி என்னும் பெயரில் பிறந்தாள். பார்வதிதேவியின் பக்தையான இவள், தனக்கு பார்வதிதேவியே மகளாகப் பிறக்கவேண்டும் என்ற வரம் பெற்றாள். அவளது அன்பான பக்திக்கு அடிமையான பார்வதிதேவி, மீனாட்சியாக அவளது மகளாக அவதரித்தாள்.