உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பன் கோவிலில் 18ம் படி திறப்பு: ஆண்,பெண் இருவரும் படியேற அனுமதி

ஐயப்பன் கோவிலில் 18ம் படி திறப்பு: ஆண்,பெண் இருவரும் படியேற அனுமதி

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி, ஐயப்பன் கோவிலில், 18ம் படி திறப்பு வரும், 22ல், நடக்கவுள்ளது. இதில், ஆண், பெண் இருபாலரும் படியேறி ஐயப்பனை தரிசிக்கலாம். ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி, நேரு நகரில் சித்தி விநாயகர், தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு, ஐயப்பனுக்கு சபரிமலையில் உள்ளது போன்று, 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் மார்கழி மாதம் முதல் சனிக்கிழமை, 18ம் படி திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி, இந்தாண்டு வரும், 22 காலை, 6:00 மணிக்கு, தத்துவங்களை விளக்கும், 18ம்படி, குருசாமி முன்னிலையில் திறக்கப்படுகிறது. தொடர்ந்து, 108 சங்காபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. அன்று காலை முதல், மாலை, 6:00 மணி வரை ஆண்,பெண் இருபாலரும், 18ம் படியேற அனுமதிக்கப்படுவர். இரவு, 7:00 மணிக்கு படி பூஜை நடக்கிறது. இதையொட்டி, நாளை மாலை (டிச.,21) தர்மசாஸ்தா ஐயப்பன் உற்சவர் ஊர்வலம் டானாபுதூர், கரிவரதராஜபெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை அடைகிறது. ஆண்,பெண் இருபாலரும் படியேறி, ஐயப்பனை தரிசிக்க,கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !