உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை ரமணர் ஜெயந்தி விழா

திருவண்ணாமலை ரமணர் ஜெயந்தி விழா

திருவண்ணாமலை: ரமணரின், 139வது ஜெயந்தி விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலையில், செங்கம் சாலை, கிரிவலப்பாதையில் உள்ள ரமணர் ஆசிரமத்தில், ரமணரின், 139வது ஜெயந்தி விழா, நேற்று (டிசம்., 25ல்) கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, நேற்று (டிசம்., 25ல்) காலை, 4:00 மணிக்கு, மங்கள இசையுடன் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், ருத்ரஜெபம், ரமணர் லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம், மங்கள ஆரத்தி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, இசையமைப்பாளர்
இளையராஜா, ரமணர் கீர்த்தனைகள் பாடினார். கலெக்டர் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !