உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவதிகையில் சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்

திருவதிகையில் சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்

பண்ருட்டி:திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நாளை (5ம் தேதி) அமாவாசையை முன்னிட்டு மூலவர் ஆண்டாள் ரங்கமன்னார் அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.நாளை (5ம் தேதி) காலை 6:30 மணிக்கு சுப்ரபாதம், 7:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 8:00 மணிக்கு மூலவர் சரநாராயண பெருமாள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் அலங்காரத்தில் அருள்பாலிக் கிறார். 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் சுவாமி உள்புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையில் அருள்பாலிக்கிறார். மதியம் 1:00 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !