உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு!

பக்தர் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு!

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் அருகே வலையபட்டி மகாலட்சுமி கோயிலில், சிவராத்திரையை முன்னிட்டு பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இங்கு ஆண்டுதோறும் சிவராத்திரி உற்சவம் நடக்கும். அம்மனை வேண்டி வரம் கேட்கும் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடக்கும். நேற்று, 30 பக்தர்களின் தலையில், பூஜாரி பூஜப்பன் தேங்காய் உடைத்தார். நேற்று அதிகாலை, குலகுருக்கள் சுந்தரமூர்த்தி, புனிதநீர் தெளித்து முதல் தேங்காய் உடைக்கப்பட்டது. இன்று பொங்கல் விழா நடக்கிறது. மாலையில், அம்மன் இடையகோட்டை சென்று மஞ்சள் நீராடுவார். விழாவில் பல மாவட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !