ப.வேலூர் சுல்தான்பேட்டையில் பகவதியம்மன் கோவில் திருவிழா
ADDED :2500 days ago
ப.வேலூர்: ப.வேலூர் சுல்தான்பேட்டையில் எழுந்தருளியுள்ள பகவதியம்மன் கோவிலில், திருவிழா நடந்து வருகிறது. கடந்த, 4 இரவு, நன்செய் இடையாறு ராஜாசுவாமி கோவிலில் இருந்து, மணிவேல் எடுத்து வந்து, காவிரியிலிருந்து கரகம் பாலித்து, காப்பு கட்டுதல்; மறுநாள் 5, 6 மற்றும் ஏழு காலை, சுவாமி வேல் எடுத்து, ஊர் விளையாடல் நிகழ்ச்சி. நேற்று (ஜன., 7ல்) மாலை, அம்மனுக்கு பூச்சொரிதல் நடந்தது.
இதில், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். இன்று (ஜன., 8ல்) மாலை, பொங்கல் மாவிளக்கு மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்,
இரவு மஞ்சள் நீராடல் மற்றும் கரகம் காவிரி ஆற்றுக்கு செல்லுதல் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.