உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் மஹோதய புண்ணியகால தீர்த்தவாரி

அருணாசலேஸ்வரர் கோவிலில் மஹோதய புண்ணியகால தீர்த்தவாரி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தை அமாவாசை, மஹோதய புண்ணியகால விழாவையொட்டி, அய்யங்குளத்தில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி நடந்தது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (பிப்.,4ல்) தை அமாவாசை மற்றும் மஹோதய புண்ணியகால விழாவை முன்னிட்டு, அய்யங்குளக்கரையில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் மற்றும்  பாரசக்தியம்மனுடன்  முன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !