தொண்டி அருகே செங்கோல் சர்ச்சில் பொங்கல் விழா
ADDED :2436 days ago
தொண்டி:தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் உள்ளபுனித செங்கோல் மாதா சர்ச்சில் பொங்கல் விழா நடந்தது. உலக நன்மைக்காகவும், மீன் பிடி தொழில் சிறக்கவும் சர்ச் முன்பாக கிராம மக்கள் சார்பில் பொங்கல் வைக்கப்பட்டது.
ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர். பின்பு கடலுக்குள் கொண்டு சென்று மீன்களுக்கு இரையாகும் வகையில் பொங்கல் கரைக்கப்பட்டது. பாதிரியார் சாமிநாதன் தலைமையில் நடந்த விழாவில் கிராம மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.