மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
2433 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
2433 days ago
பொள்ளாச்சி:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவதற்காக, பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் நேற்று (பிப்., 3ல்) நடந்தது.
விழாவையொட்டி, காலை 7:00 மணிக்கு ஹயக்ரீவர் ஹோமம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இவ்விழாவில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.குழந்தைகளின் கல்வி ஞானம் சிறந்து விளங்கவும், தேர்வில் முதன்மை பெறவும், வாழ்வில் வெற்றி பெறவும் இந்த சிறப்பு யாகம் நடத்தப்பட்டது, என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
2433 days ago
2433 days ago