உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் 9ல் பிரம்மோற்சவம் துவக்கம்

திருத்தணி முருகன் கோவிலில் 9ல் பிரம்மோற்சவம் துவக்கம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், பிரம்மோற்சவ விழா, 9ம் தேதி துவங்கி, இம்மாதம், 20ம் தேதி வரை நடைபெறுகிறது.

திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும், மாசி பிரம்மோற்சவ விழா வெகு விமர்ச்சையாக நடந்து வருகிறது. 12 நாட்கள் நடக்கும் இவ்விழாவில், உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் தினமும் ஒரு வாகனத்தில் காலை, மாலை என, இரு வேளைகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.அந்த வகையில், இந்தாண்டின் பிரம்மோற்சவ விழா, 9ம் தேதி விநாயகர் வீதியுலாவுடன் துவங்குகிறது. 10ம் தேதி காலை, 5:30- - 6:30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 16ம் தேதி தேரும், 17ம் தேதி, நள்ளிரவில் வள்ளி திருக்கல்யாணம் உற்சவமும், 19ம் தேதி, கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !