பழநியில் குவிந்த பக்தர்கள்
ADDED :2538 days ago
பழநி:ஞாயிறு விடுமுறை தினத்தில், பழநிமுருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் மூன்று மணிநேரம் காத்திருந்து சுவாமிதரிசனம் செய்தனர்.பழநி மலைக் கோயிலுக்கு வழக்கமாக சனி, ஞாயிறு தினங்களில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா போன்ற வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். நேற்று (பிப்., 10ல்) ஞாயிறு பொது விடுமுறை, சுபமுகூர்த்த தினம் காரணமாக மலைக்கோயிலில் அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள்
பால்குடங்கள், காவடி எடுத்துவந்தனர்.ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் 2 மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்தனர்.
மலைக்கோயில் பொதுதரிசன வழியில் 3 மணிநேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். இதே போல தங்கரதப் புறப்பாட்டை காணவும் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.