ஸ்ரீமுஷ்ணத்தில் பன்னிரு கருட சேவை உற்சவம்
ADDED :2424 days ago
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் நம்மாழ்வார் கைங்கர்ய சபா மற்றும் பஜனை கோஷ்டியர்கள் சார்பில் பன்னிரு கருட சேவை உற்சவம் நடந்தது.
ஆண்டிமடம், விளந்தை, கோபாலபுரம், கோமங்கலம்,அனிகுதிச்சான் லட்சுமி நாராயணபெருமாள், கோமங்கலம் பிரசன்ன வெங்கடேசபெருமாள், க.இளமங்கலம் ராதாகிருஷ்ண பெருமாள், கோ. பவழங்குடி, பெரம்பலூர், கொசப்பள்ளம், ரெட்டிக்குப்பம் சீனுவாச பெருமாள், மன்னம்பாடி வேணுகோபால்சுவாமி, விருத்தாசலம் ராஜகோபாலசாமி, எசனூர், சாத்தியம், வண்ணான்குடிகாடு, பெ. பூவனூர், மேமாத்தூர் வரதராஜபெருமாள், கோபுராபுரம் ஆதிநாராயண பெருமாள், திருப்பயர் பட்டாபிராமன் பெருமாள், கோவிலூர் ராதாகிருஷ்ணன் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தனர்.