உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தட்சணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

தட்சணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

அதியமான்கோட்டை: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சண காசி காலபைரவர் கோவிலில், சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது.

தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமி நாளில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள், சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி, நேர்த்திக்கடன் செலுத்தி கோவிலை, 18 முறை சுற்றி வலம் வந்து, காலபைரவரை தரிசனம் செய்வது வழக்கம். மாசி மாத தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று, ஏராளமான பக்தர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பின், சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முன்னதாக காலை, 6:00 மணிக்கு காலபைரவருக்கு அஷ்டபைரவயாகம், அஷ்டலஷ்மியாகம், தனகார்சன குபேரயாகம், அதிருந்ரயாகம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தன. பின், மூலவருக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டது. மதியம், 12:00 மணிக்கு உற்சவ தட்சணகாசி காலைபைரவர், கோவிலை சுற்றி மூன்று முறை தேரில் வலம்வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நள்ளிரவு, 12:00 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய் வற்றல் யாகபூஜை நடந்தது. இதேபோல், கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பைரவருக்கு, நேற்று சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !