நாகதோஷம் போக்கும் சிவன்!
ADDED :2445 days ago
வணிகன் மகள் ஒருத்தி திருமணத்திற்காக திருமருகல் (திருவாரூர் அருகில்) என்னும் தலத்திற்கு வந்து தங்கியிருந்தாள். திருமணத்திற்கு முதல்நாள் இரவு மணமகனை நாகம் தீண்டியதால் இறந்தான். அந்த சமயத்தில் திருமருகல் சிவனை வழிபட வந்த ஞானசம்பந்தர், மணப்பெண்ணின் அழுகுரல் கேட்டார். இரக்கப்பட்ட அவர், திருமருகல் ஈசனான மாணிக்கவண்ணர் மீது பதிகம் பாடினார். சிவனருளால் மணமகன் தூங்கி எழுவது போல கண்விழித்தான். குறித்த முகூர்த்தத்தில் திருமணம் நடந்தேறியது. நாகதோஷத்தால் உண்டாகும் திருமணத்தடையைப் போக்குவதில் சிறந்த தலம். திருவாரூர், கும்பகோணத்தில் இருந்து பஸ் உண்டு.