உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவபுரிபட்டியில் பிரதோஷ வழிபாடு

சிவபுரிபட்டியில் பிரதோஷ வழிபாடு

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

இக்கோயிலில் 5 அடி உயர நந்தி சிலை உள்ளது. நேற்று மாலை 4:30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு மஞ்சள், திருநீரு, பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான மங்கலப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நந்திதேவருக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி அம்பாளுடன் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலிலும், சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் கோயிலிலும் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !