உன்னால் முடியும் தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி!!!
ADDED :2616 days ago
* யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். உழைப்பின் மூலம் சொந்தக் காலில் நிற்கப் பழகுங்கள்.
* பிறர் குற்றம் சொல்லும் விதத்தில் நடக்காதீர்கள். கடமையைக் கண்ணாக மதியுங்கள்.
* கற்ற நல்ல விஷயங்களை வாழ்வில் கடைபிடிப்பவனே அறிவாளி.
* செல்வமும் ஆயுளும் தாமரை இலை தண்ணீர் போல, நம்மை விட்டு ஓடி விடும்.
* போதும் என்ற எண்ணம் இல்லாதவன் எதையோ இழந்தவன் போல அலைந்து கொண்டிருப்பான்.
* மரணத்தைக் கண்டு அஞ்சாத மனிதனே மாவீரன். சோம்பலை விட்டு விலகியவனே மகாசூரன்.
* மனிதன் பழி பாவத்திற்கு அஞ்சி நடக்க வேண்டும். குற்றமில்லாத வாழ்வே உயர்வுக்கு வழிவகுக்கும்.
* தூக்கத்தில் இருந்து எழுவதை விட, அறியாமை என்னும் தூக்கத்தில் இருந்து எழுவது அவசியம்.
* நல்லவர் நட்பால், எல்லா நன்மைகளையும் அடையலாம். - தைரியமூட்டுகிறார் ஜெயேந்திரர்