நடுவீரப்பட்டில் நிகும்பலா யாகம்
ADDED :2451 days ago
நடுவீரப்பட்டு:நடுவீரப்பட்டு பிரத்தியங்கராதேவிக்கு மாசி மாத அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது.
நடுவீரப்பட்டு நரியன் ஓடை கரையில் உள்ள பாதாளகாளி மற்றும் பிரத்தியங்கார தேவி கோவிலில் நிகும்பலாயாகத்தையொட்டி, நேற்று (மார்ச்., 6ல்) மதியம் 12:00 மணிக்கு பிரத்தியங்கராதேவி மண்டபத்தில் கலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு, யாக வேள்விகள் துவங்கியது. மதியம் 1:30 மணிக்கு யாகத்தில் மிளகாய் வற்றல்கள் கொட்டப்பட்டு நிகும்பலாயாகம் நடந்தது.
தொடர்ந்து யாக வேள்வியில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து, பிரத்தியங்கராதேவிக்கு கலச அபிஷேகம் நடந்தது. மதியம் 2:00 மணிக்கு பாதாளகாளிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 2:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி அறிவழகன் குருக்கள் செய்திருந்தார்.