கடவுளை அடைய அகந்தையை விடுங்கள்
ADDED :2396 days ago
கோவை : ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சிந்து சதன் கலையரங்கில், உள்ளது நாற்பது என்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று 24ல் நடந்தது.நிகழ்ச்சியில், ரமண மகரிஷி குறித்து, முனைவர் பிரனதார்த்தி ஹரன் பேசுகையில், ஞானிகளின் உடல் எந்த சூழலிலும், சுத்தமாகவே இருக்கும். அதேபோல், அவர்களுக்கு அகந்தை என்கிற நிழல் கிடையாது. அதுபோல மனிதர்களும்,
அகந்தை என்ற ஆசை இல்லாமல் இருந்தால், கடவுளை சென்றடைய முடியும், என்றார்.