உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் பங்குனி பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.இக்கோயில் விழா கடந்த மார்ச் 31 ல் துவங்கி 10 நாட்களாக நடந்து வருகிறது. தினமும் மாரியம்மன் மற்றும் வெயிலுகந்தம்மன் பல்வேறு மண்டகபடிகளில் எழுந்தருளி பல்வேறு வாகனங்களில் விதி உலா வந்து அருள்பாலித்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று முன் தினம் நடந்தது. அன்று இரவு முதல் நேற்று வரை அம்மனுக்கு பக்தர்கள் கயிறு குத்து, அக்னி சட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல், வேடங்கள் , பறவை காவடி, அலகு குத்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விருதுநகர், மதுரை, சிவகாசி என பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வெயிலுகந்தம்மன், மாரியம்மன் தேரில் எழுந்தருள இன்று தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !