உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வன்னிய பெருமாள் கோவில் தேரோட்டம்

வன்னிய பெருமாள் கோவில் தேரோட்டம்

புதுச்சேரி: முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில் நேற்று நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவ நாட்களில் தினமும் காலையில் திருமஞ்சனமும், மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 26ம் தேதி கருட சேவையும், 29ம் தேதி திருக்கல்யாணமும் நடந்தது. 10ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மாலை 6:00 மணிக்கு கோபுர வாயிலில் தீர்த்தவாரி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !