தர்மபுரி சிவன் கோவில்களில் நந்திக்கு சிறப்பு பூஜை
ADDED :2453 days ago
தர்மபுரி: பிரதோஷத்தை முன்னிட்டு, சிவன் கோவில்களில், நேற்று, சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக அலங்காரங்கள் நடந்தன.
தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள நந்திக்கு, பால், தேன், சந்தனம் உள்ளிட்ட, பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தன. தொடர்ந்து நந்திக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு மேல், மூலவர் மகாலிங்கேஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிசக்தி சிவன் கோவில்களில், பிரதோஷ வழிபாடு நடந்தது.