சோழவந்தான் அருகே பத்ரகாளியம்மன் கோயிலில் மறு பூஜை விழா
ADDED :2341 days ago
காடுபட்டி:சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டி பத்ரகாளியம்மன் கோயிலில் மறுபூஜை விழா நடந்தது.ஏராளமான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று (மே., 12ல்) மறுபூஜையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.