எது நம்முடைய நேரம்
ADDED :2337 days ago
“கோயிலுக்கு போகும் பழக்கம் உண்டா?” என சிலரைக் கேட்டால், “எனக்கிருக்கும் வேலையில் அதற்கெல்லாம் நேரம் ஏது” என பதிலளிப்பர். இப்படி சொல்வது ஏற்புடையதல்ல. வீட்டுக்கு அருகில் பெரிய கோயில்கள் இல்லாவிட்டாலும் சிறு விநாயகர் கோயிலாவது இருக்கும். ’ஓம் சக்தி விநாயக நம’ என்னும் மந்திரத்தை 108 முறை சொல்லி இவரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். ’கடவுளை வழிபடும் நேரம் மட்டுமே நம்முடைய நேரம்; மற்றதெல்லாம் நமக்குரியதல்ல’ என்கிறார் வாரியார்.