திருவள்ளூர் வீரராகவர் மாடவீதி புறப்பாடு
ADDED :2545 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், நேற்று, (மே., 15ல்) உற்சவர் மாடவீதி புறப்பாடு நடைபெற்றது.
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், ஒவ்வொரு ஏகாதசி அன்றும், காலை, பெருமாளுக்கு திருமஞ்சனமும், மாலை பெருமாள் மாடவீதி புறப்பாடும் நடைபெறும்.நேற்று (மே., 15ல்), சர்வ ஏகாதசியை முன்னிட்டு, காலை, உற்சவர் வீரராகவருக்கு, திருமஞ்சனமும், மாலை, 5:30 மணிக்கு, தேவி, தேவி சமேத வீரராகவர் மாட வீதி புறப்பாடு நடைபெற்றது.