உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரு வரியில் நாயன்மார்கள்!

ஒரு வரியில் நாயன்மார்கள்!

இளையான்குடி மாறர், முனையாடுவார், சிறப்புலியார், இடங்கழியார், மூர்க்கர், அப்பூதி அடிகள் - சிவனடியார்களுக்கு உணவளித்தவர்கள்

நமிநந்தியடிகள், கணம்புல்லர், கலியர் - விளக்கேற்றி தொண்டு செய்தவர்கள்

கணநாதர், நேசர், பெருமிழலை குறும்பர்- - சிவனடியார்களுக்கு உதவி செய்தவர்கள்

திருநாளைப்போவார், தண்டியடிகள் - குளம் வெட்டியவர்கள்
சோமாசி மாறர் - தினமும் யாகம் செய்தவர்

ஐயடிகள் காடவர் கோன்- - சிவத்தலத்துக்கு ஒரு பாடல் பாடியவர்

திருமூலர் - திருமந்திரம் ஆசிரியர்

காரி  - கோயிலைப் புதுப்பித்தவர்

வாயிலார் - மனதால் சிவனை பூஜித்தவர்

பூசலார் - உள்ளத்தில் சிவனுக்கு கோயில் கட்டியவர்

நீலகண்ட யாழ்ப்பாணர் - யாழிசைத்து சிவனை வணங்கியவர்

அமர்நீதி - அடியார்களுக்கு ஆடை வழங்கியவர்

மெய்ப்பொருளார், ஏனாதிநாதர் - எதிரியையும் திருநீறு பூசியதால் மன்னித்தவர்கள்

திருக்குறிப்பு தொண்டர் - அடியார்களின் ஆடைகளை சலவை செய்தவர்

குங்கிலியக்கலயர் - கோயில்களுக்கு சாம்பிராணி தூபமிட்டவர்

முருகர் - பூஜைக்குரிய மலர்கள் பறித்தவர்

உருத்திர பசுபதியார்- - ருத்ர மந்திரம் ஜபித்தவர்

ஆனாயர் - புல்லாங்குழல் இசைத்து பசுக்களை பராமரித்தவர்

கண்ணப்பர் - சிவனுக்கு கண்தானம் செய்தவர்

திருநீலகண்டர் - பெண்ணாசை துறந்தவர்

சுந்தரர் - சிவனுக்கு நண்பராக வாழ்ந்தவர்

இயற்பகையார் - மனைவியை தானமளித்தவர்

கலிக்காமர், விறல்மிண்டர் - வணங்காமல் சென்ற சுந்தரரைக் கண்டித்தவர்கள்.

எறிபத்தர் - பூஜைக்குரிய  மலரை பறித்த யானை, பாகனை கொன்றவர்

மானக்கஞ்சாறர் - மணமாக இருந்த மகளின் கூந்தலை வழங்கியவர்

அரிவாட்டாயர்- -  நைவேத்யம் சிந்தியதால் கழுத்தை அறுத்தவர்

மூர்த்தி - சிவனுக்கு சந்தனம் தேய்த்துக் கொடுத்தவர்

சண்டேசர் - சிவனுக்குரிய பிரசாதத்தை ஏற்பவர்

திருநாவுக்கரசர் - பாம்பு தீண்டிய குழந்தையை பிழைக்கச் செய்தவர்

நின்றசீர் நெடுமாறர்- - மதுரை மன்னர் சாம்பல் பூசி வயிற்றுவலி தீரப் பெற்றவர்

குலச்சிறையார்- - சம்பந்தர் மூலம் சைவ சமயத்தைக் காத்தவர்

சடையனார் - - சுந்தரரின் தந்தையார்
திருநீலநக்கர்- -    சிவனுக்கு குற்றம் இழைத்த மனைவியைப் பிரிந்தவர்

திருஞான சம்பந்தர் - பார்வதியிடம் ஞானப்பால் அருந்தியவர்

மூர்க்கர் - சூதாட்டத்தின் மூலம் சிவத்தொண்டு செய்தவர்

சாக்கியர் - கல்லை மலராகக் கருதி சிவ பூஜை செய்தவர்

கழறிற்றறிவார் - சிவனருளால் மிருக பாஷை அறிந்தவர்

கணநாதர் - சிவதொண்டர்களுக்கு பயிற்சி அளித்தவர்

கூற்றுவர் - சிவனின் திருவடியை தலையில் தாங்கியவர்

புகழ்ச்சோழர் - தன்னால் கொல்லப்பட்டவர்களைக் கண்டு வருந்தி தீக்குளித்தவர்

நரசிங்க முனையரையர்- - திருவாதிரையன்று  பொன்னும், உணவும் தானம் செய்தவர்

அதிபத்தர் - தனக்கு கிடைத்த பொன்மீனை சிவனுக்கு அர்ப்பணித்தவர்

கலிக்கம்பர் - அடியாருக்கு தொண்டு செய்யாத மனைவியின் கையை வெட்டியவர்.

சத்தி - சிவனடியார்களை இகழ்ந்தவர்களின்  நாக்கை அறுத்தவர்

வாயிலார்- - மவுனவிரதம் இருந்து சிவனைப் பூஜித்தவர்

செருத்துணையார் - சிவனுக்குரிய பூவை முகர்ந்த மனைவியின் மூக்கை வெட்டியவர்

புகழ்த்துணையார்- - அபிஷேக குடம் சிவலிங்கம் மீது தவறி விழுந்ததால் வருந்தியவர்

கோட்புலியார் - சிவனுக்குரிய நெல்லை எடுத்து சாப்பிட்ட உறவினர்களை கொன்றவர்

கோச்செங்கட்சோழர்- - சிலந்தியாக இருந்து சிவனருளால் மன்னராக பிறந்தவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !